'இறுக்கமான சுகாதர நடைமுறை' - இன்று வெளிவரும் வர்த்தமானி

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார எச்சரித்துள்ளார்.





குறித்த வர்த்தமானியின் பிரகாரம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு 06 மாதங்கள் சிறைத் தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.





முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.