ஊடகவியலாளர்களுக்கான விசேட அறிவித்தல்

banner

அரச தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் (அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு) பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.





எனவே, குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்களும், சுகாதார பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





மேற்படி ஊடகவியலாளருக்கு வைரஸ் தொற்றியுள்ளதா என்பது தொடர்பான பரிசோதனை அறிக்கை வெளிவரும்வரை, பொதுவெளியில் செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற ஊடகவியலாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.