முழுமையாக முடக்கப்பட்டது கம்பஹா மாவட்டம்
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு இவ்வாறு அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் இருந்தது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Related Posts