இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா - கொட்டாஞ்சேனையும் முடக்கம்

banner

நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.





பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்த 6 பேருக்கும், அவர்களுடன் தொடர்பை பேணிய 22 பேருக்கும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் 22 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.





இதன்படி மினுவாங்கொட கொத்தணி பரவலின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 558 ஆக அதிகரித்துள்ளது.





அதேவேளை, கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலும் இன்று மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.