வேகமாக பரவும் கொரோனா - 14ஆவது மரணமும் பதிவானது
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்றுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றியவர்களில் இன்றுவரை 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 453 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னரே இன்று 14 ஆவது மரணம் பதிவானது. குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே (வயது - 50) இவ்வாறு பலியாகியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் சமூகதொற்று என்ற அபாய கட்டத்தில் இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related Posts