7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
நாட்டில் மேலும் 256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்த 39 பேருக்கும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 217 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
2ஆவது அலைமூலம் இதுவரையில் 3 அயிரத்து 682 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 865 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts