11 அதிரடிப்படையினருக்கு கொரோனா - 3 முகாம்கள் முடக்கம்

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் விசேட அதிரடிப்படை முகாம்கள் மூன்று முடக்கப்படவுள்ளன.





விசேட அதிரடிப்படை முகாமில் 11 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமையினால், களனி, களுபோவில, ராஜகிரிய ஆகிய மூன்று முகாம்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.





முகாமிற்கு மீன் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற போது இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.





இதேவேளை, மிரிஹான, சீதுவ மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





பொலிஸ் அதிகாரிகள் 345 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.