இலங்கையில் 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

banner

இலங்கையில் மேலும் 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணி பரவல்மூலம் 265 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 15 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.





2ஆவது அலை ஊடாக இலங்கையில் இதுவரையில் 4 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.





அதேவேளை, இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 8 ஆயிரத்து 152 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.