கிளிநொச்சி மீன் சந்தையில் 60 பேருக்கு PCR பரிசோதனை

banner

கிளிநொச்சி பொதுச் சந்தையில் மீன் வியாபார பகுதியில் 60 வியாபாரிகளிடம்
பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (27) பெறப்பட்டன.





கிளிநொச்சி கரைச்சி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால்
மேற்படி மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.





பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் காரணமாக
யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. எனவே அதனை கருத்தில்
கொண்டு முன்னாய்த்த நடவடிக்கையாக கிளிநொச்சி மீன் சந்தையிலும் 60
பேருக்கு பிசிஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.