5 கோடியை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது.





சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.





இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.





தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 958 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 34 லட்சத்து 57 ஆயிரத்து 645 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91 ஆயிரத்து 807 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.





கொரோனாவில் இருந்து 3 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.