தப்பியோடிய கைதிகள்மீது சூடு - ஒருவர் பலி!
Sri Lanka 3 ஆண்டுகள் முன்
கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து நேற்றிரவு தப்பியோடிய கைதிகள்மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் ஒரு கைதி காயமடைந்துள்ளார்.
இரு கைதிகள் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ள பழைய போகம்பரை சிறைச்சாலையில் இருந்து, பிரதான சிறைச்சாலை நோக்கி அழைத்துச்செல்ல முற்படும்போதே 5 கைதிகள் தப்பியோட முயற்சித்துள்ளனர். இதனையடுத்தே துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related Posts