பொகவந்தலாவயில் 6 பேருக்கு கொரோனா தொற்று

banner

நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார்.





பொகவந்தலாவ குயினா தோட்டத்திற்கு கொழும்பிலிருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததனையடுத்து அப்பகுதியில் கடந்த 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அடிப்படையிலேயே அறுவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஐந்து பேரும் பொகவந்தலாவ நகரில் வெற்றிலை விற்பனையில் ஈடுபடும் நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இவர்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.





குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.