கிழக்கு மாகாணத்தில் 419 பேருக்கு கொரோனா தொற்று

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 419 ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.





இன்று (08) செவ்வாய்க்கிழமை மாலை வரையிலும் கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனைகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





அக்கரைப்பற்று பொதுச்சந்தை உடன் தொடர்பு பட்டவர்களாக அக்கரைப்பற்றில் 12 பேரும் ஆலையடிவேம்பில் மூவர் இனங்காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 419 ஆக அதிகரித்துள்ளதாகவும்- அக்கரைப்பற்று பொதுச் சபையுடன் தொடர்புபட்டவர்களில் இதுவரையில் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிலையினை உணராமல் சிலர் செயற்படுவதாகவும் இதன் காரணமாக ஏனையவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.





இந்நிலையில் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.





(அப்துல்சலாம் யாசீம்)