மாமியார்மீது தாக்குதல் - ஆசிரியை மருமகள் கைது!

banner

உணவு உண்பதற்காக தனது அனுமதியின்றி, கறி எடுத்த மாமியாரை அவரின் மருமகள் கத்தியைக்காட்டிமிரட்டி கடுமையாக தாக்கிய கொடூரச் சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.





இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து கம்பளை, சிங்ஹாபிட்டிய பகுதியைச் சேர்ந்த மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தாயான ஆசிரியை ஒருவரையே கம்பளை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.





கைதான ஆசிரியை கம்பளை மாவட்ட நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் லலித் வீரசேன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.





இடியப்பம் சாப்பிடுவதற்காக தனது அனுமதியின்றி கறி எடுத்ததற்காக குறித்து ஆசிரியை தனது மாமியாரை தாக்கும் காட்சியை அவரின் 9 மற்றும் 10 வயதுகளுடைய இரு பிள்ளைகள் தொலைபேசியில் வீடியோ செய்துள்ளனர்.





இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான வயோதிபப் பெண்ணிடம் குறித்த காணொளி சில தினங்களுக்கு முன்னர் சிக்கியுள்ளது. அதனை அவர் சமூகவலைத்தளங்களில் பதவிட்டுள்ளார். இது தொடர்பில் கம்பளை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவர்பபட்டதையடுத்தே நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.