'கிழக்கில் 07 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளம்'

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

கிழக்கு மாகாணத்தில் 07 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக நேற்று (14) முதல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.





கல்முனை தெற்கு, காத்தான்குடி, அம்பாறை, கிண்ணியா, காரைதீவு, ஓட்டமாவடி, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஒரு வார காலத்திற்குள் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.





சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.





இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 1734 ஆக அதிகரித்துள்ளதாகவும் 49 ஆயிரத்து 97 பேருக்கு பீ.சீ.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.