காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருப்புகொடி கட்டி ஆயருக்கு அஞ்சலி

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.





வவுனியா இறம்பைக்குளம் அந்தோணியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றிருந்தது.





இதன்போது அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினமும் அனுஸ்டிக்கப்பட்டது.





இதன்போது கருத்து தெரிவித்த உறவுகள், “எமது இனத்திற்காகவும் நீதிக்காகவும் போராடிய உன்னதமான மனிதராக அவர் இருந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் என்றவகையில் அவரது மரணம் எமக்கு பேரிழப்பாகவே இருக்கிறது. அதனை ஈடுசெய்ய எவராலும் முடியாது. அவரது உயிர் பிரிந்தாலும் அவர் எம்மோடே என்றும் பயணிப்பார்” என தெரிவித்தனர்.