திருமலையில் விபத்து - நால்வர் காயம்
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் மஹதிவுல்வெவ பகுதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இன்று மாலை 4.45 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் நொச்சிகுளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கதிரவேல் மனோஷன் (31வயது) , விஜயகுமார் பிரதாப் (20வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
(அப்துல்சலாம் யாசீம்)
Related Posts