கொரோனாவால் மேலும் 36 பேர் பலி

banner

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 36 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 51 ஆக உயர்வடைந்துள்ளது.





உயிரிழந்தவர்களில் 19 ஆண்களும் , 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





எம்பிலிபிட்டி, நாவலப்பிட்டி, புசல்லாவ, வென்னொருவ, பன்னல, இரத்மலானை, இராஜகிரிய, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊராபொல, கட்டுவ, செவனகல, தெலிகம, எஹலியகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன.





அத்துடன், நிகபொத,  பெல்லபிட்டிய, பண்டாரகமை, இங்கிரிய, குன்னேபான, கிங்தொட்ட,  இமதுவ, தல்பே,  தல்கஸ்வெல, எல்பிட்டி, பயாகல, வஸ்கடுவ, ஹேனகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.
அதேநேரம் ஹொரணை, மாத்தளை, பேராதனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா 2 பேரும் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.