கொவிஷீல்ட் கிடைக்குமா? 579,453 பேர் காத்திருப்பு!
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரை 16 லட்சத்து 8 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் - பை (Sputnik - V) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.
இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 789 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 79 ஆயிரத்து 453 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றவேண்டியுள்ளது.
2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 6 லட்சத்து 66 ஆயிரத்து 612 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 435 பேர் பெற்றுள்ளனர்.
ஸ்புட்னிக் - பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. மே 30 வரை 16 ஆயிரத்து 664 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி ஆரம்பமாகவில்லை.
Related Posts