வடக்கில் 6 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

banner

வடக்கு மாகாணத்தில் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை 6 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





இதன்படி யாழ். மாவட்டத்தில் 3 ஆயிரத்து 305 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 997 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 888 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





அத்துடன் வவுனியா மாவட்டத்தில் 812 பேரும், மன்னார் மாவட்டத்தில் 575 பேரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கொவிட் - 19 தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.