மாகாணத்தடை நீடிப்பு - மீண்டும் 'ஐ.சி'. நடைமுறை

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறியமுடிகின்றது.





அத்துடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களை மட்டும் சேவையில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட பல நடைமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும், தேசிய அடையாள அட்டை நடைமுறையின் பிரகாரமே வெளியில் செல்லும் நடைமுறையும் ஆரம்பமாகவும் எனவும் தெரியவருகின்றது.





அதேபோல மதுபானசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும். திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களை நடத்தவும் இடமளிக்கப்படாது என தெரியவருகின்றது.





பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் எவ்வாறான தடைகள் அமுலில் இருக்கும் என்பது தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.