தாய், தந்தை, மகனின் உயிரை பறித்த கொரோனா

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் சம்பவமொன்று பேராதனை, முருதலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.





72 வயதுடைய தந்தையும், 70 வயதுடைய தாயும், 38 வயதுடைய மகனுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.





கொரோனா தொற்றிய இவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.





இவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. எவ்வாறு இவ்வாறு நடைபெற்றது, எந்த பக்கத்தில் தவறு உள்ளது, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவம் பதிவாவதை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார தரப்பு தெரிவித்தது.