சினிமாப் பாணியில் மனைவியை வெட்டிய கணவன்
Community 2 ஆண்டுகள் முன்
கணவனின் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை(12) பிற்பகல் 2 மணியளவில் சம்பந்தர் கடைவீதி கரவெட்டி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காந்தரூபன் பிரேமலதா (வயது- 38) என்பவர் படுகாயமடைந்துள்ளார். கணவனும் மனைவியும் ஏற்கனவே பிரிந்திருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் மனைவி வந்து கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து பிறிதொரு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த கணவன் அவரை கத்தியினால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related Posts