'அரசு கைவிரிப்பு - கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தவிப்பு'

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசினால் 10 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்படும்.





ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத்தை வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்டத்திலுள்ள கூட்டுவுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.





அதிகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கு எமக்கு நிதி கிடைக்கவில்லை. ஆனால் உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கான பட்டியல்கள் மாத்திரம் கிடைக்கப்பெற்று வருகின்றன.





மேலும் பொருட்களை வழங்குவதற்கான கூறுவிலை கோரல் எம்மிடம் பெறப்பட்ட போது காணப்பட்ட பொருட்களில் விலைகளில் தற்போது இல்லை. அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில் நாம்தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றோம் எனக் கூட்டுறவுச்
சங்கங்கள் தெரிவித்துள்ளன.





எனவே இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு வினவிய போது, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கான நிதியினை நாம்
திறைசேரியிடம் கோரியுள்ளோம். எனவே நிதி கிடைத்ததும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.