காபூல் ட்ரோன் தாக்குதலில் ஆறு குழந்தைகள் மரணம்!

World 2 ஆண்டுகள் முன்

banner

காபூல் நகரில் அமெரிக்கப் படைகளின் ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன் விமானம் நடத்திய ரொக்கட் தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தவர் கள் பத்துப் பேர் உயிரிழந்தனர் என்று
அறிவிக்கப்படுகிறது.





இந்தச் சம்பவம் தொடர்பாக உறவினர் கள் தெரிவித்த தகவல்கள் மற்றும் படங்களை காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் வெளியிட்டிருக்கிறார்.





இஸ்லாமிய தேசத் தீவிரவாதிகளின் ஆப்கான் அணியைச் சேர்ந்த ஒருவர் பயணித்த வாகனம் ஒன்றின் மீது தனது ட்ரோன் விமானம் ஒன்று துல்லியமாகத்தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் வீடு ஒன்றில் தரித்து நின்ற வாகனம் ஒன்றே தாக்குத லுக்கு இலக்கானது என்றும், அந்த வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட பத்து பேரே உயிரிழந்தனர் என்றும் சுயாதீனசெய்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.





உயிரிழந்த குழந்தைகள் இரண்டு வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதை பிபிசி செய்
தியாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.





முகங்களையும் உருவங்களையும் அடையாளம் காணமுடியாதவாறு சடலங்கள்கருகிக்கிடந்தன என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.





ட்ரோன் தாக்குதல் நடத் தப்பட்ட கையோடு தொடராக பல குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. வாகனத்தில் இருந்து வெடித்த குண்டுகளே அப்பகுதியில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அமெரிக்கப் படைக
களது மத்திய கட்டளைப்பீடம் முன்னர் தெரிவித்திருந்தது.





காபூல் விமான நிலை யம் மீது தாக்குதல் நடத்துவதற்காக குண்டுகள் ஏற்றப்பட்டிருந்த வாகனத்தின் மீதேட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அது கூறியிருந்தது.





ஆனால் தற்போது சிவிலியன் இழப்புகள் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல் களை அடுத்துச்சம்பவம் குறித்து வெளிப் படையான விசாரணைகள் நடத்தப்படும் என்று பென்ரகன் அதிகாரி ஒருவர் தெரி
வித்துள்ளார்.





ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படை களை விலக்கியுள்ள அமெரிக்கா அங்கு வான் வழியாக ட்ரோன் மூலமான புதிய போரைத் தொடுத்துள்ளது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இஸ்லாமியத்தீவிரவாதிகள் மீதான இந்தப் புதிய போர் சிவிலியன்களது பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.





குமாரதாஸன் - பாரிஸ்