கிளிநொச்சியில் 'கொரோனா' மரண வீதம் அதிகரிப்பு

banner

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 4,112 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. 30 மரணங்களும் ஏற்பட்டுள்ளன - என்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.





சுமார் 146 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் மேற்படி எண்ணிக்கையிலான கொவிட் 19 தொற்றாளர்கள் என்பது அதிகரித்த தொகை என்பதோடு, மரணங்களும் அதிகரித்தே காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.





இதேவேளை மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மாத்திரம் வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 45 பேர் வரையான சுகாதார பணியாளர்களும் தொற்றுக்குள்ளாக்கியுள்ளனர் என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.





எனவே தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார துறையினரால் நோயாளிகளை முறையாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் எனவே பொது
மக்கள் மிகுந்த சமூக பொறுப்புடன் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நோய் தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் தங்கள் உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார தரப்பு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.