மின்னல் தாக்கி பலியானவருக்கு கொரோனா

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.





குறித்த நபர் நேற்று முன்தினம் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.





35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.