கிணற்றில் மூழ்கி மாணவன் பலி! சுழிபுரத்தில் சோகம்

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

சுழிபுரம் - திக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் மூழ்கி மாணவரொருவர் இன்று பலியாகியுள்ளார்.





யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் மாணவர் ஒருவர் தனது நண்பர்கள் சகிதம், பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு, சுழிபுரம் - திக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் நீத்துவதற்குச் சென்றுள்ளார்.





கிணற்றில் அவர் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.





மூளாய் வைத்தியசாலையில் இருந்து குறித்த இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்போது அவரது உயிர் பிரிந்தது.





குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.