யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு இன்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
வருடாந்தம் மாவீரர் வாரத்தில் யாழ். பல்கலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும்.
போரால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, மாணவர்கள் முழந்தாளிட்டு, மல் தூவி, மாவீரர்களுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்தினர்.
பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும், பொலிஸாரும், இராணுவ , பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்தும் விதத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், அதை பொருட்படுத்தாது, மாணவர்கள் வீரவணக்கம் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
Related Posts