கருகலைப்பு தொடர்பான விவாதம் அமெரிக்காவில் சூடுபிடிப்பு

banner

ந. பரமேஸ்வரன்





கருகலைப்பு தொடர்பான விவாதங்கள் அமெரிக்காவில் சூடு பிடித்துள்ளன.





15 வாரங்களான கருவை கலைப்பதற்கு தடை விதிக்குமாறு மிஸிஸிப்பி மாநில நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.





இந்த வழக்கின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தினால் வருகிற ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இது கோடிக்கணக்கான பெண்களின் கருக்கலைக்கும் உரிமையை பாதிக்கும் என மகளிர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.





அமெரிக்க சட்டப்படி ஒரு பெண்ணுக்கு முதல் மூன்று மாதங்களில் கருவை கலைப்பதற்கு பூரண உரிமையுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் கலைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட உரிமையுள்ளது.
1973 முதல் இந்த சட்டம் அமுலில் உள்ளது.





இப்போது கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களின் பின்னர் இந்த திருப்பகரமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





தகவல்களின் படி மிஸிஸிப்பி மாநிலத்தில் இடம்பெறும் 15 வாரங்களான சட்டவிரோத கருக்கலைப்புகள் பாலியல் வல்லுறவின் மூலமும் குடும்ப உறவுகளின் துஷ்பிரயோகத்தாலுமே இடம்பெறுகின்றன.





2018ம் ஆண்டு மிஸிஸிப்பி மாநில நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு இப்போது உயர்நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது.





அமெரிக்காவில் மாநிலங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது; மிஸிஸிப்பி மாநிலத்தைதொடர்ந்து ஏனைய மாநிலங்களும் கருக்கலைப்பு தொடர்பாக மிஸிஸிப்பி மாநில சட்டத்தை விட கூடுதலான சட்டங்களை இயற்றவுள்ளன.





சட்டமா அதிபர் இறுதித்தீமானம் அமெரிக்க மக்களினதும் அதிகாரிகளினதும் கைகளிலேயே உள்ளது என தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட குடும்ப சுகாதார நலன் பேணும் அமைப்பு புதிய சட்டத்தின் மூலம் கருத்தரிக்கும் ஆற்றல் கொண்ட 18.49 வயதுடைய 36 மில்லியன் பெண்கள் தமது கருக்கலைக்கும் உரிமையை இழந்து விடுவார்கள் என தெரிவித்துள்ளது.