பரந்தனில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
கிளிநொச்சி, பரந்தன் உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பலியாகியுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இறுதி கட்ட யுத்தத்தின் போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட எறிகணை குண்டுகளை சட்டவிரோத முறையில் சேகரித்து அவற்றை பழைய இரும்புக்காக விற்பனைக்காக மின்சார இயந்திரத்தினால் வெட்ட முற்பட்ட வேலையில் 81 வகையை
சேர்ந்த எறிகணை குண்டு வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் 25 வயதுடைய சிவலிங்கம் யுவராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள நபரின் சகோதரன் 13 வயதுடைய சிவலிங்கம் நிலக்ஸன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள சில பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Posts