காணாமல்போன மற்றுமொரு இளைஞரும் சடலமாக மீட்பு
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி காணாமற்போன மற்றுமொரு இளைஞரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (14) காலை குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
யாழ். பருத்தித்துறையை சேர்ந்தவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற போது படகின் வௌி இணைப்பு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
படகிலிருந்த 08 பேரில் ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்தபோது அவரை காப்பாற்றுவதற்காக மற்றுமொருவர் கடலில் குதித்துள்ளார்.
யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த 21 மற்றும் 27 வயதான இருவரே காணாமற்போயிருந்தனர்.
அவர்களில் 21 வயதான இளைஞர் நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதான மற்றுமொரு இளைஞர் இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
Related Posts