'கிளிநொச்சியில் 42 பேரின் உயிரை பலியெடுத்துள்ள விபத்துகள்'

banner

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் விபத்துக்களால் 42 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. வீதியில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் சடுதியாக திரும்புதல் மற்றும், வீதி நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமை போன்ற விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும்பொழுது வீதியை கடக்க முற்படுவது தொடர்பில் கடுமையாக அவதானம் செலுத்த வே்ணடும் என்ற கோரிக்கையை பொலிஸார் முன்வைத்துள்ளனர்.





இதேவேளை கிளிநொச்சி நகரில் விபத்துக்கள் இடம்பெறுவது குறைவாக காணப்படுவதாகவும், நகரிற்கு அப்பால் உள்ள கரடிபோக்கு தொடக்கம் பளை வரையான பகுதியிலும், 155ம் கட்டை தொடக்கம் இரணைமடு சந்தி வரையிலும் விபத்துக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.





இலங்கை முழுவதும் 70 கிலோ மீட்டர் வேகத்துக்குட்பட்டதாகவே வீதிகள் காணப்படுவதாகவும், அதனை மீறி பயணிப்பதாலேயே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இதன்போது தெரிவித்தனர்.