'நீதவான் வீட்டிலேயே தாலிக் கொடியை அறுத்த கொள்ளையர்கள்'

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தமிழர் செறிந்து வாழும் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நான்கு பெண்களின் தாலிகொடிகளை அறுத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.





அக்கரைப்பற்று குருக்கள் வீதி, வாச்சிக்குடா, ஆலையடிவேம்பு மற்றும் வை.ம்.சி.ஏ வீதியில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட ஒரு மாதத்தில் மாத்திரம் 4 வீடுகளில் நள்ளிரவில் ஜன்னல் வழியாக கொள்ளையர்கள் இறங்கி உறங்கிகொண்டிருந்த பெண்களின் கழுத்தில் இருந்த சுமார் 30 பவுண் நிறை கொண்ட தாலிக்கொடிகளை அறுத்தெடுத்து சென்றுள்ளனர்.





இந்த கொள்ளைச் சம்பவங்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் இரவு வேளைகளில் இடம்பெற்றுள்ளதுடன் கொள்ளையர்கள் தமது ஆள் அடையாளம் தெரியாதவாறு மிகவும் திட்டமிட்டு இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எந்தவொரு நபரும் கைதாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.