குடும்பஸ்தர் குத்திப் படுகொலை - மன்னாரில் பயங்கரம்
மன்னார், ஓலைத்தொடுவாய், தைலான் குடியிருப்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் இன்று (26) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் , புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
விறகு வெட்டுவோருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
மன்னார் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts