காணாமல்போன மகனைத் தேடிய தாய் மரணம்! தொடர்கிறது துயரம்!!

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த மற்றுமொரு தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.





வவுனியா பூம்புகார் பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாயி (வயது - 78) என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.





இவரது வளர்ப்பு மகனான இந்திரன் (வயது - 38) கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.





வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு, தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடிவந்தார். எனினும், தனது மகனை காணாமலேயே உயிரிழந்துவிட்டார்.