'125 கொடிய விஷப் பாம்புகளுக்கு மத்தியிலிருந்து சடலம் மீட்பு' - நடந்தது என்ன?

World 1 வருடம் முன்

banner

ந. பரமேஸ்வரன்





125 கொடிய விஷ பாம்புகளுக்கு மத்தியிலிருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.





அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தைச்சேர்ந்த சார்ள்ஸ் கண்டி என்ற 49 வயது நபரே இவ்வாறு 125 கொடிய விஷப்பாம்புகளின் மத்தியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.





இறந்தவரின் அயல்வீட்டுக்காரர் கடந்த புதன்கிழமை இரவு இவரது நடமாட்டத்தை ஒரு நாள் முழுவதும் காணவில்லையென பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.





இதனையடுத்து பொலிஸார் அவரது வீட்டுக்குச்சென்ற போது அவர் சுய நினைவற்ற நிலையில் நிலத்தில் கிடந்துள்ளார்.





பொலிஸ் தீயணைப்பு சேவையினர் வீட்டை அடைந்த போது 14 அடி நீளமான மலைப்பாம்பு, நாகம் உட்பட 125 விஷப்பாம்புகள் அவரைச்சுற்றியிருப்பதை அவதானித்தனர். இவரை கொலை செய்யும் நோக்குடன் இந்த சம்பவம் இடம்பெறவில்லையென தெரிவித்துள்ள பொலிஸார் ,சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.





அந்தப்பிரதேசத்திற்குரிய விலங்கு கட்டுப்பட்டு அதிகாரிகள் அனைத்து பாம்புகளையும் பிடித்து பைகளில் போட்டுச்சென்றனர்.