கிளிநொச்சியில் வேகமாக பரவும் கொரோனா

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.





கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் பி.சி.ஆர் பரிசோதனை செய்தவர்களில் 200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 50 பேர் மாணவர்களாக காணப்படுகின்றனர். 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும் உள்ளடங்குகின்றனர்.





அத்தோடு இரண்டு கர்ப்பிணித் தாய்மாரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.





அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தொற்று பரவும் வேகம் அதிகமாக காணப்படுகின்றமையால் பொது மக்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து செயற்பட வேண்டும்.





தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அவற்றை தவறாது செலுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
நெடுந்தூர பஸ்சேவைகள் தொடர்பில் தனியார் முடிவுகளை எடுக்கக்கூடாது." - என்றார்.