மகளையும், மருமகனையும் கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Australia 2 ஆண்டுகள் முன்

banner

இரு வருடங்களுக்கு முன்னர், தனது மகளையும் மருமகனையும் கொலை செய்த ஒருவருக்கு விக்ரோறியா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.





Osman Shaptafaj என்ற 57 வயது நபர், மகளின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்பதற்காக மகளையும் மருமகனையும் சுட்டுப்படுகொலை செய்திருந்தார். இக்கொலையின் பின்னர், அவர் தன்னைதானே இரு தடவைகள் சுட்டுக்கொண்டுள்ளார். இதனால் கொலையாளியின் வலது கண்ணிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டன.





கொலையாளி தனது ஆயுள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டுமென்பதற்காக கொலையாளிக்கு 35 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





“ உங்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்களை, நீங்கள் கொலை செய்துள்ளீர்கள்…”என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். Shaptafaj.தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்கிறார்.