மன்னாரில் அரியவகையான ஆமைகள் மீட்பு

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு எழுத்தூர் பகுதியிலுள்ள வீடொன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கடலாமைகள் மீட்கப்பட்டுள்ளன.





பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் எழுத்தூர் பகுதியிலுள்ள குறித்த வீடு சோதனையிடப்பட்டது.





இதன்போது வீட்டின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிய வகை கடலாமைகள் 5 பொலிஸாரால் மீட்கப்பட்டன.





ஆமைகள் அரிய வகை பேராமை இனத்தை சேர்ந்தவை என்பதுடன் ஒவ்வொரு ஆமையும் சுமார் 100 கிலோ எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.எனினும் குறித்த வீட்டில் சந்தேக நபர்கள் எவரும் இருக்கவில்லை.கடலாமைகள் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கடலில் விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.





சந்தேக நபர்கள் குறித்து மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.