ஈழத் தமிழர்களுக்கு பெருமை தேடி தந்த உதைப்பந்தாட்ட வீரர் திடீர் மரணம்

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர் டக்சன் புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.





மன்னாரினை சேர்ந்த இவர், இலங்கை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.





மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.





இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்றுச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.





அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.





கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் , இ ந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார். இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.