மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் பலி - சம்மாந்துறையில் சோகம்
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
சம்மாந்துறை, நைனா காடு பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் விறகு தேடிச்சென்ற சந்தர்ப்பத்தில், ஆற்றில் உடைந்து வீழ்ந்திருந்த யானை வேலி மூலம் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நைனா காடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts