எரிவாயு வரிசையில் நின்றி முதியவர் மயங்கி விழுந்தார்!
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
தெஹிவல பகுதியில் எரிவாயு வரிசையில் நின்ற வயோதிபர் ஒருவர், மயங்கி எரிவாயு சிலிண்டர் மீது விடுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை பொலிஸார் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
தெஹவல காலி வீதி வைத்யா வீதிக்கு அருகேயுள்ள எரிவாயு விற்பனை நிலையமொன்றில் இன்று (24)அதிகாலை முதல் எரிவாயு கொள்வனவு செய்ய வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த வரிசையில் நின்ற வயோதிபர் ஒருவரே இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார்.
Related Posts