சிறுமியின் முகத்தில் சூடு வைத்த தாயும் கள்ளக்காதலனும் கைது!

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

தாயும், அவரது கள்ளக்காதலனும் இணைந்து, கரண்டியை சூடாக்கி மகளின் கன்னத்தில் சூடு வைத்த கொடூரச் சம்பவமொன்று மாரவில, நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.  





இது தொடர்பில் தாயும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 





கைது செய்யப்பட்ட தாய்க்கு சம்பவத்துக்கு முகம் கொடுத்த 11





வயது சிறுமியும் , ஐந்து வயதில் ஒரு மகளும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். 





சிறுமிக்கு தண்டனையாக கரண்டியொன்றை பழுக்க சூடாக்கி கன்னத்திலும் உதட்டிலும் வைத்ததால் சிறுமி  காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 





சிறுமி சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது டன் , தாயும் தாயின் கள்ளக்காதலனும் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





ஏனைய இரண்டு பிள்ளைகளும் பொலிஸாரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளனர்.