மரவள்ளிக் கிழங்குகளின் உள்ளே கொக்கெயின் போதைப் பொருள்
World 1 வருடம் முன்
பாரிஸ் புறநகரங்களில் பிரபல பல்பொருள் அங்காடிகளில் மரவள்ளிக் கிழங்கு வாங்கியோர் அவற்றின் உள்ளே வெண்ணிறப் பவுடர் போன்ற பொருள் சிறு பொதிகளில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Orly இல் உள்ள Leclerc, Essonne இல் உள்ள Fleury-Mérogis ஆகிய இரண்டு பல்பொருள் அங்காடிகளில் மரவள்ளி
வாங்கியவர்களே அவற்றின் உட்புறத்தில் சந்தேகத்துக்குரிய பவுடர் பொதிகள் இருப்பது கண்டு நிர்வாகங்களுக்கு
அறிவித்துள்ளனர்.
உடனடியாகப் பொலீஸ் ஜொந்தாமினர் அழைக்கப்பட்டனர். கிழங்குகள் கைப்பற்றப்பட்டு மோப்ப நாய்களின் உதவியோடு சோதனை செய்யப்பட்டன. அதன் போதுகிலோ கணக்கிலான கொக்கெயின் போதைவஸ்த்து மீட்கப்பட்டிருக்கிறது.
13 மரவள்ளிக் கிழங்குகளின் உள்ளே இருந்து சுமார் நான்கு கிலோ கொக்கெயின் பவுடர் பொதிகள் கைப்பற்றப்பட்
டுள்ளன. அவற்றின் சந்தைப் பெறுமதிமூன்று லட்சம் ஈரோக்கள் என மதிப்பிடப்படுகிறது.
பல் பொருள் அங்காடி ஒன்றின் ஊழியர்கிழங்குகளில் போதைப் பொருள் இருப்பதை தெரிந்து கொண்டு அவற்றில் சிலவற்றை எடுத்து ஒளித்து வைப்பதற்கு முற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
விசாரிப்பதற்காக அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். marché de Rungis எனப்படுகின்ற மரக்கறி, பழவகைகளைச் சந்தைகளுக்கு விநியோகிக்கின்ற பெருநிறுவனத்தின் ஊடாகவே மரவள்ளிக்கிழங்குகள் ஆபிரிக்கா மற்றும் மேற்கு
இந்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
மரவள்ளிக் கிழங்குகளில் கொக்கெயின் மீட்கப்பட்டமை மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்ற பொலீஸார், விசாரணைகளை முடுக்கியுள்ளனர். பல்பொருள் அங்கா
டிகள், சந்தைகளில் சோதனைகளும் கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related Posts