அரசுக்கு எதிராக மலைநாட்டிலும் போராட்டம் தொடர்கிறது

Sri Lanka 1 வருடம் முன்

banner

அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று தோட்ட தொழிலாளர்களால் இன்று நுவரெலியா, ராகலையில் மேற்கொள்ளப்பட்டது.





சென்லெனாட்ஸ் தோட்டம், ராகலை மேல்பிரிவு, ராகலை கீழ்பிரிவு, ஹல்கரனோயா தோட்டம், டெல்மார் தோட்டம், சூரியகாந்தி தோட்டம், ஸ்டாபோட் தோட்டம் மற்றும் சின் ஒப்ராசி ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களே, இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





மேற்படி தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பேரணியாக ராகலை நகரம் வந்து அங்கு அனைவரும் ஒன்றுக்கூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.





தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.