விபத்தில் மூவர் பலி! (காணொளி)

Sri Lanka 1 வருடம் முன்

banner

பஸ்ஸுடன் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில், ஆட்டோவில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்.





பொலன்னறுவை, மட்டக்களப்பு வீதியில், மனம்பிட்டிய பிரதேசத்தில் கொடலிய பாலத்துக்கு அருகிலேயே இன்று அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.





ஆட்டோவில் பயணித்த அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 67 மற்றும் 62 வயதுடைய வயோதிபத் தம்பதியினரும், 72 வயதுடைய உறவினருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.





மூவரும் ஓட்டோவில் அரலகங்வில – அருணபுர பகுதியிலிருந்து மாத்தளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.





குறித்த ஓட்டோ பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.






https://www.youtube.com/watch?v=ErQjVr7vV0E&t=76s