சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!

banner

நாட்டில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக நிவாரணம் தேடும் வகையில் இந்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





விசேடமாக கடல்வழியாக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது சுலபமான வழி என தெரிவிக்கப்படுகிறது.





இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு படகுகளில் செல்லக்கூடிய பிரதேசங்களில் கடற் படையினரின் ரோந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.





இலங்கை விமானப் படையினரும் இந்நாட்களில் இதுகுறித்து விசேட கவனம் செலுத்தி வருவதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.





கடந்த காலங்களில் வடக்கிலுள்ள சுமார் 200 பேர் கடல்வழியாக இந்தியா சென்றுள்ளதாகவும் பலர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.