யாழில் நான்கு மீனவர்கள் கைது!

Sri Lanka 1 வருடம் முன்

banner

யாழ்ப்பாணம், குருநகரில் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





குருநகரை சேர்ந்த நான்கு மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.





ஊர்காவற்துறை கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய , இந்த வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.





இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து படகு, 8 டெட்டனேட்டர்கள், மருந்து நிரப்பப்பட்ட 6 குழாய்கள், 2 ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.





கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.