இரு சிறார்கள் நீரிழ் மூழ்கி பலி!

Sri Lanka 1 வருடம் முன்

banner

அக்கரைப்பற்று, இறக்காமம்- வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.





நேற்று பிற்பகல் குறித்த ஆற்றில் நீராடச் சென்ற இரு சிறுவர்களும், நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சேர்த்தனர்.





இந்தநிலையில், அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.





9 வயது சிறுமியும், 6 வயது சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்தனர்.





சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.